திரும்பி பார்க்கலாமா...
வண்ண மலர்கள்
நாம்...
ஏகப்பட்ட எதிர்பார்ப்பும்
எக்கச்சக்க கனவுகளும் தான்
நம் கல்லூரி வாழ்க்கையின்
தொடக்கம்...
வகுப்புல அடங்காம மாட்டிகிட்டு
அப்பப்ப அமைதியா நடிச்சுகிட்டு
கலாய்ச்சு திருஞ்ச கலகலப்பும்
தீர்ந்ததோ...!
உணவு இடைவெளியில்
ஒரே டிப்பனில்
ஒன்பது பேர் சாப்பிட்ட
நிமிடமும் முடிந்ததோ...!
கிலோ கணக்கில்
கடலை போட்டு
கவலை மறந்த காலமும்
முடிந்ததோ...!
ஓரமாக நின்னு நின்னு
ஒதுங்கி ஒதுங்கி பாத்துகிட்ட
ஒரு தலை காதலும்
கலைந்ததோ...!
கடைசி நேர ASSIGNMENT-ம்
SIGN வாங்காத RECORD நோட்- ம்
நம் கைவிட்டு பிரிந்ததோ..!
தேர்வு நேர பயமும்
அதற்கு காலை நேர
படிப்பும் உருண்டோடி
போனதோ...!
ஐந்து பைக்கில்
பதினைத்து பேர்
சுற்றி திரிந்த காலமும்
சீக்கிரமாய் போனதோ..!
அரியர் வெச்சாலும்
அறிவாளி நாமதாண்டா னு
ஆட்டம் போட்ட நொடிகளும்
ஓடியதோ..!
காலம் தான் முடிந்தாலும்
கடிகாரங்கள் ஓடினாலும்
எங்கள் மனதில்
இருக்கும் பொக்கிஷங்கள்...
அஞ்சு ரூபா காசும்
பாக்கெட்டுல இல்லாம
அம்பானி போல சுத்துனோம்
நண்பன் கூட சேந்துகிட்டு...!
எங்கள் ஆய்வக
கணிபொறியும் சொல்லும்
கள்ளம் கலந்த எங்கள்
கணிப்பொறி அறிவை..!
கண்டதெலாம் கிறுக்கிகிட்டு
கவிதைனு சொல்லிக்குவோம்
மொக்கை போட்டாலும்
அழகா சிரிச்சுக்குவோம்..!
குட்டி கிட்டி சண்டை
எட்டித்தான் பார்த்தாலும்
கண்டுகாம போய்கிட்டோம்...!
டேய் " நண்பா " னு
சொல்லிக்கிட்டு
நடை ஒன்னு நடந்தாலே
சோகம் எல்லாம்
மறந்துபுட்டோம்..!
இப்படி எழுதியல்லாம்
தீராது எங்களோட
கல்லூரி வாழ்க்கை
நினைச்சுட்டு இருந்தாலே
பல யுகம் வாழ்ந்திடுவோம்....
உதிர்ந்த பூக்களாய்
பிரிந்தாலும்
எங்கள் நட்பு
என்னும் வேர்
கல்லூரியில் என்றும்
புதைந்தே இருக்கும்
அழியா நினைவுகளாய்...
இப்படிக்கு
- நினைவுகள்
- பரத் முருகன்
In these lines are remains KCT life. Happy to read this poem.
ReplyDeleteAgain Congratz barath bro