Friday, 2 June 2017
Tuesday, 30 May 2017
பெண்ணியம்
" பெண்ணியம் "
கள்ளிப் பாலில்
பிறக்கிறது பெண்ணின்
வாழ்க்கை !
மூத்த பெண்ணா
பிறந்துவிட்டால்
மொத்த பாரமும்
இவளுக்கே !
பள்ளிக்கூடம் போகையில
பட்டாம்பூச்சி இவ தானே
பட்டாசாய் வெடிக்கும் இவள் ஆசை
பருவம் அது தொட்டாலே !
விளையாட்டு பிள்ளை தான்
பருவம் அடையும் முன்னே
தலையாட்டும் வாழ்க்கை என்ன
பருவம் தொட்ட பின்னே !
ஆண் வர்க்கம்
சமுதாயம்
ஏதேதோ சொல்லி
கிள்ளிப் போடும் அவள்
பெண்ணியத்தை !
கல்நெஞ்சு காரிக்கும்
காதல் வருவதுண்டு
காதலனை நம்பி
கண்ணீரும் கண்டதுண்டு !
பெத்தவங்க பேச்சாள
காதலனும்
மத்தவங்க போல் ஆவான்
இவள் நிலைமை அறியாமலே !
காதலனின் சாபத்துக்கும்
கணவன் என வருவோனின்
எதிர்பார்ப்புக்கும்
இடையில் இவள் புழுவாய்
துடிப்பாளே !
பல இரவு
இவள் கண்ணீர்
தலையணையை
முத்தமிட ..
பகல் கனவாய்
போகும் இவள்
எண்ணம் பட்ட
வண்ணமான வாழ்க்கை !
கண்ணீர் உறுதுணையா
கண் துடைக்க
ஆள் உண்டா
என ஏக்கத்தோடு
எத்தனை நாளோ ?
புகுந்த வீட்டு
வலியெல்லாம்
பிறந்த வீட்டில்
காட்டாம , கள்ளி அவ
கண் துடைப்பா..!
திருவிழா சாமி போல
ஊரே இவளே தாங்கும்
காரணம் என்னனா
வம்சம் வளர
சாமியே இவ தான !
என்ன பாவம்
செய்தாலோ
இவளுக்கும்
" பெண் பிள்ளை '
மாமியார் , மருமகள்
சண்டைக்கும்
இவளே பகடை காய்
மாமியாரும் பெண் தானே
மருமகளும் பெண் தானே !
விதவை என்னும்
வேஷத்தில்
நிதமும் இவளுக்கு
விஷமே !
மலடி என்னும்
வேஷத்தில்
மங்கை அவள்
உயிர் இருக்கும்
நடை பிணமே !
எனவே ..!
எனவே ..!
கை கூப்பி வணங்கிடுவோம்
கள்ளம் இல்லா பெண்ணியத்தை!
- பரத் முருகன்
Subscribe to:
Posts (Atom)